tamilnadu

img

பேராவூரணி பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பைங்கால் ஊராட்சி சாணாகரை கிராமத்தில் 42 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.  இவர் சென்னையில் குளிர்பானக் கடை நடத்தி வந்துள்ளார். தற்போது சென்னையில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் தனது சொந்த ஊருக்கு கடந்த மே.6 ஆம் தேதி வந்துள்ளார். அன்றைய தினமே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவரையும், குடும்பத்தினரையும் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி சென்றனர். 

தஞ்சைக்கு அனுப்பப்பட்ட பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பது, வெள்ளிக்கிழமை உறுதியானதையடுத்து, 108 சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அவரையும் அவரது குடும்பத்தாரையும், சுகாதாரத் துறையினர் தஞ்சைக்கு அழைத்து சென்றனர். மேலும் சாணாகரை கிராமத்தைச் சுற்றி 5 கிமீ வரை தடை செய்யப்பட்ட  பகுதியாக அறிவித்து, வருவாய்த் துறையினரும், சுகாதாரத் துறையினரும் மற்றும் காவல்துறையினர் இணைந்து இப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். மேலும் அவருடன் தொடர்புடைய  நபர்களையும் விசாரணை செய்து வருவதாக பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலட்சுமி கூறினார்.

;