tamilnadu

img

பரிசீலனைக்குப் பிறகு தமிழகத்தில் சிஆர்பிஎப் தேர்வு மையம் அமைக்கப்படும்.... சு.வெங்கடேசன் எம்.பி.,யின் கோரிக்கைக்கு மத்திய அரசு பதில்

மதுரை:
பரிசீலனை முடிந்தவுடன் தேவைப்பட்டால் தமிழகத்தில் மத்திய ரிசர்வ் காவல் படை( CRPF) தேர்வு மையம்  அமைக்கப்படும் என்றுமதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசனின் கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
மத்திய ரிசர்வ் காவல் படையின் 24 துணை மருத்துவப் பணி களுக்கான நியமனங்களுக் கான தேர்வு மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட வேண்டுமென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி..  சு. வெங்கடேசனின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு  தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையம் அமைக்கப்படு மென சி.ஆர்.பி.எப் பொது இயக்குனரகம் பதில் அளித்துள்ளது.

சு.வெங்கடேசன் கோரிக்கை
குரூப் “பி” மற்றும் குரூப் “சி” அமைச்சுப் பணிஅல்லாத (Non ministerial), பதிவிதழில் இடம் பெறாத, மோதல் முனைகளில் பணிபுரிகிற 780 அகில இந்தியப் பணியிடங்களுக்கான  எழுத்து தேர்வு  20.12.2020 அன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.நியமன அறிவிக்கையில் தேர்வு மையங்கள் 9 இடங்களில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவற்றில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும்கிழக்கு பகுதிகளில் தலா 1 இடமும் அமைந் துள்ளன.  தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒருதேர்வு மையம் கூட இல்லை.

இது தமிழக, புதுச்சேரி விண்ணப்பதாரர் களை மிகப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கும். குறிப்பாக இன்றைய கோவிட் 19 சூழல், மக்களின் நகர்வுகளுக்கு இருக்கிற பிரச்சனைகள் ஆகிய பின்புலத்தில் மேற்கண்ட பணிகளுக்கான போட்டியில் ஈடுபடுவதற்கான தடைகளாகவும் மாறுமென்று சு.வெங்கடேசன்  எம்.பி., உள்துறை அமைச்சருக்கும், சி.ஆர்.பி.எப் பொது இயக்குநருக்கும் அக்டோபர் 10 அன்று கடிதம் எழுதியிருந்தார். தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதிகுறைந்த பட்சம் ஒரு மையத்தை இவ்விருபகுதிகளுக்கும் அறிவிக்குமாறுகோரியிருந்தார்.

சி.ஆர்.பி.எப் பதில்
அக் கடிதத்திற்கு 19.10.2020 தேதியிட்ட பதிலில், சிஆர்பிஎப்  டி.ஐ.ஜி.பி (ரெக்ரூட்மெண்ட்) தமனோஜ் தியானி  கூறுகையில், “முந்தைய பணி நியமனம் மற்றும் தற்போது எதிர்பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், தேர்வு மையங்கள் பகுதி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2020- துணை மருத்துவப் பணிநியமனங்கள் தொடர்பாக  வரப் பெற்றுள்ள விண்ணப்பங்களைப் பரிசீலித்து வருகிறோம். இப் பரிசீலனை முடிந்தவுடன் தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையங்கள் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சு. வெங்கடேசன் கருத்து
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் “திறந்த மனதோடு கூடுதல்மையங்களுக்கான கோரிக்கை பரிசீலிக்கப்படு மென்று தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக் குரியது. தமிழகம், புதுவைக்கு தேர்வு மையம் கிடைக்குமென்று நம்புகிறேன். அதை சி.ஆர்.பி.எப் உறுதி செய்ய வேண்டும்.விண்ணப்ப நிலையிலேயே தேர்வு மையங்கள்அறிவிக்கப்படுவது, மையங்கள் இல்லாத பகுதிகளை சார்ந்தவர்களின் முனைப்பை பாதித்திருக்க கூடுமென்பதால் புதிய மையங்களை அறிவித்து விண்ணப்ப தேதியையும் நீட்டிக்க வேண்டுமென்ற எனது   கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். கோவிட் சூழலை மனதில் கொண்டு இக் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்”இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;