tamilnadu

img

பாஜக கபில் மிஸ்ராவின் அச்சுறுத்தலுக்கு பின்னரே தில்லியில் வன்முறை துவங்கியது....ஆய்வறிக்கையில் சிறுபான்மை ஆணையம் குற்றச்சாட்டு

புதுதில்லி:
பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் அச்சுறுத்தலுக்கு பின்னரே தில்லியில் வன்முறை  துவங்கியது என்றும் தில்லி வன்முறை ஒருதலைப்பட்சமானது; நன்கு திட்டமிடப்பட்டது என்றும் சிறுபான்மை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. 
மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெறக் கோரி தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மதவெறிக்கும்பல் தாக்குதல் நடத்தி,வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

தில்லி வன்முறை சம்பவம் தொடர்பாகஇதுவரை 1427 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது 436 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில வடகிழக்கு தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தில்லி சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் ஜாபருல் இஸ்லாம் கான் அடங்கிய தூதுக்குழு ஆய்வு செய்து அறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு தில்லியில்  வெடித்த வன்முறை ஒரு தலைப்பட்சமானது,  நன்கு திட்டமிடப்பட்டவை. மேலும் கடைகள் மற்றும்வீடுகளுக்கு அதிகபட்ச சேதம் விளைவிக்கும் வகையில் உள்ளூர் மக்களிடமிருந்து ஆதரவை பெற்று நடத்தப்பட்டு உள்ளது.  வன்முறை காரணமாக ஏற்பட்ட சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டு தில்லி அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதாக இல்லை.நாங்கள் சென்ற எல்லா இடங்களிலும் முஸ்லிம் வீடுகள், கடைகள் மற்றும் பட்டறைகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 24-25 தேதிகளில் தப்பி ஓடிய பின்னர்மக்கள் சேதமடைந்த வீடுகளுக்கு முதன்முறையாக வருகை தருவதை நாங்கள் கண்டோம்.  ஆனால் வீடுகள் மற்றும் கடைகள்மோசமாக சேதமடைந்து குப்பைகளாக கிடந்ததால், அவர்கள் எப்படி  அங்கு வாழ முடியும்.முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு பயணநிறுவனம் மற்றும் மோட்டார் சைக்கிள்ஷோரூம் போன்ற கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. பிப்ரவரி 23 அன்று வன்முறை, பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் அச்சுறுத்தல் மற்றும் இறுதி எச்சரிக்கைக்கு பின்னரே தொடங்கியுள்ளது.

சாலையின் ஒரு பக்கத்தில் முஸ்லிம் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. மறுபுறம் இந்து வீடுகள் மற்றும் கடைகள்உள்ளன. இரு பகுதிகளும் கொள்ளையடித்துஎரிக்கப்பட்டன. எரிந்த பெட்ரோல் பம்பில்,உரிமையாளர் மஹிந்தர் அகர்வால் 30வாகனங்கள் அங்கு தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;