tamilnadu

img

இந்திய தேர்தல் ஆணையம் முற்றிலும் சீர்குலைந்துவிட்டது

புதுதில்லி, ஏப்.18- தேர்தல் ஆணையத்தின் செயல் பாடு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் ராணுவ தளபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். மோடி ஆட்சியில், மத்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருப்பதாக, ஏற்கெனவே அரசின் உயர் அதிகாரிகள் பலர் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதிகள், ராணுவத் தளபதிகள், அரசுஉயர் அதிகாரிகள் 80 பேர், புதிதாகஒரு கடிதத்தை குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பியுள்ளனர். தில்லி காவல்துறை முன்னாள் ஆணையர் ஆர்.எஸ். குப்தா, இந்தியவிமானப்படையின் முன்னாள் துணைத் தளபதி ஆர்.சி. பாஜ்பாய், வெளிவிவகாரத்துறை முன்னாள் உயர் அதிகாரி அசோக்குமார், ராணுவமுன்னாள் துணைத்தளபதி ஏ.கே. ஷானி உள்ளிட்டோர் இந்த கடிதத்தில்கையெழுத்திட்டுள்ளனர்.


அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:“தேர்தல் ஆணைய நடவடிக்கைகளின் மீது அதிருப்தி தெரிவித்து நாங்கள் ஏற்கெனவே தங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால்,அதன் பிறகும் கூட தேர்தல் ஆணையத்தின் போக்கில் மாற்றம் தென்படவில்லை. இப்போது தேர்தல் ஆணையம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும் போது அதன் மீதான நம்பகத் தன்மை மேலும் கவலை அடையச் செய்கிறது.தேர்தல் ஆணையத்தின் மீதானகளங்கம் உச்சக்கட்டத்தை அடைந்துஇருக்கிறது. இவர்களால் நேர்மையான முறையில் தேர்தல் நடத்த முடியுமா? என்ற சந்தேகம் அதிகரித்துஇருக்கிறது. அதற்கான திறன் தேர்தல் ஆணையத்திடம் தென்படவில்லை. அதன் செயல்பாடுகளும் முற்றிலும் சீர்குலைந்து இருக்கிறது.நாட்டின் முக்கியமான குடிமகன் கள் என்ற முறையில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் கவலையை உங்கள் முன்பு வைக்கிறோம்.ஜனநாயகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதனைத்தரம் தாழ்த்த சிலர் முயற்சிக்கிறார் கள். தேர்தல் ஆணையமும் அதற்குவளைந்து கொடுத்து பாரபட்சமாக நடக்கிறது. குறிப்பிட்ட நபர்களின் நலனுக்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது. ஆளும் கட்சியினரின் தேர்தல் விதி மீறல்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் அதன் மதிப்பை இழந்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

;