tamilnadu

img

மகேந்திரா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக் ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு

மகேந்திரா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஆனந்த் மகேந்திரா அறிவித்துள்ளார்.

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களி்ல் ஒன்று மகேந்திரா அண்ட் மகேந்திரா. இந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக ஆனந்த் மகேந்திரா பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் அவர் அந்த பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மகேந்திரா நிறுவனத்தில் பல நிர்வாக ரீதியான மாறுதல்கள் வரவுள்ளதால், நிர்வாக தலைவர் பதவியில் இருந்து 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால், நிர்வாக ரீதியாக அல்லாத தலைவராக அவர் தொடர்ந்து நிறுவனத்தை வழிகாட்ட உள்ளாதாக கூறப்படுகிறது.

அதேசமயம், நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள கோனேகா வரும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி பதவி ஓய்வு பெறும்போது அந்த இடத்துக்கு அனீஷ் ஷா நியமிக்கப்படுவார் எனவும் தெரிகிறது. அதுவரை அந்த பதவியில் கேனேகா தொடருவார்.

;