எப்போதும் சிறுபான்மை சமூக மக்கள் மதச்சார்பற்ற மக்களாகத்தான் தங்களது வாக்குகளை செலுத்தியிருக்கிறார்கள். திண்டுக்கல்லில் அதிமுக அணியில் வேட்பாளராக போட்டியிடுபவர் இஸ்லாமியர். அதற்காக பேகம்பூர் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பதல்ல. இராமநாதபுரம் தொகுதியில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் ‘இந்தியா’ அணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதற்காக இராமேஸ்வரம் பகுதி இந்துக்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதும் அல்ல. மக்கள் எப்போதும் சாதி, மதங்களைப் புறக்கணித்து அரசியலாகத்தான் வாக்களிக்கிறார்கள். இதுதான் வரலாறு.